அறிவு, ஞானம், தொலைநோக்குப் பார்வை போன்ற நற்குணங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இத்தகைய நற்பண்புகளைக் கொண்டுள்ள ஒருவர், மிகவும் கடினமான சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய பண்புகளை உணர்த்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அறிவு, விவேகம், அச்சமற்ற தன்னம்பிக்கை ஆற்றல்மிக்க பேச்சுத்திறன், காலத்தின் தேவையை உணர்ந்து கொள்ளும் தொலைநோக்குப் பார்வை, புதியவை குறித்த ஞானம் போன்ற ஆறுவிதமான பண்புகள் ஒவ்வொரு மனிதனின் முயற்சியிலும் காமதேனுவைப் போன்று ஒவ்வொரு இலக்கையும் எட்டுவதற்கு உதவுகின்றன.





